Posts

Showing posts from July, 2026

பென்னாகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட போடூர் அடுக்குமாடி குடியிருப்பு RTI பதில்கள் 2026

Image
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட போடூர் பகுதியில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தின் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 30 கேள்விக்கு பெறப்பட்ட 30 பதில்களை இங்கு இணைத்துள்ளேன் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.... தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் (ஒப்புகை அடையாளப்படுத்தப்பட்ட கூடிய பதிவு அஞ்சல்) Petition No : MKA/01 அனுப்புநர்: மு.க. அண்ணாமலை, MSW பெரும்பாலை அஞ்சல் – பென்னாகரம் வட்டம், தருமபுரி மாவட்டம் – 636811. பெறுநர்: பொது தகவல் அலுவலர் / கோட்டப் பொறியாளர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், 3/2, நாராயணசாமி தெரு, பொறியாளர், சேலம் – 636007. பொருள்: தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 6(1)-ன் கீழ் – தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பேரூராட்சி, போடூர் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் தொடர்பான நிர்வாக, நிதி, பயனாளி தேர்வு, கட்டுமான தரம், ஒதுக்கீடு மற்றும் பராமரிப்பு தொடர்பான முழுமையான தகவல்கள் கோரி மனு – தொடர்பாக. மதிப்பிற்குரிய ஐயா / அம்மா, தகவல்...

"கிராம பஞ்சாயத்து தலைவரின் கடமைகள் "

Image
கிராம_ஊராட்சி_தலைவரின்_கடமைகள் 1. மாதந்தோறும் 10-ம் தேதிக்குள் ஊராட்சிக் கூட்டத்தை நடத்துதல் (பிரிவு 90) 2. இரு கூட்டங்களுக்கு இடையேயான இடைவெளி 60 நாட்களுக்கு மிகைப்படக்கூடாது 3. செயல் அலுவலர் என்ற முறையில் ஊராட்சி நிறைவேற்றும் தீர்மானங்களை செயல்படுத்துதல் (பிரிவு 84) 4. ஊராட்சி அலுவலகம் விடுமுறை நாட்கள்தவிர இதர நாட்களில் திறக்கப்பட்டு செயல்படுவதை கண்காணித்தல் 5. ஊராட்சி பணியாளர்களின் வருகை மற்றம் பணிகளை கண்காணித்தல் 6. ஊராட்சியின் 31 பதிவேடுகள், தளவாடச்சாமான்கள் ஊராட்சி அலுவலகத்தில் உள்ளதை உறுதி செய்தல். 7. கைப்பம்புகள், விசைப்பம்புகள், தெரு விளக்குகள் 100 மூ செயல்படுகிறதா என்பதை கண்காணித்தல் 8. வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) நடத்தும் மாதாந்திர கூட்டங்களில் கலந்துகொண்டு கிராம ஊராட்சியின் செயல்பாட்டு அறிக்கையினை சமர்ப்பித்தல் 9. வீட்டு வரி, தொழில் வரி, உரிமக் கட்டணம், வீட்டுக்குழாய் இணைப்புக்கான குடிநீர் கட்டணம் ஆகியவற்றை வரி உரிய தேதியில் ஊராட்சிய எழுத்தர் வசூல் செய்வதை வசூலான தொகையை மறுநாளே வங்கியில் செலுத்தப்படுவதையும் கண்காணித்தல் 10. மனைப்பிரிவு கட்டிட வரைபடங்...