"கிராம பஞ்சாயத்து தலைவரின் கடமைகள் "
கிராம_ஊராட்சி_தலைவரின்_கடமைகள்
1. மாதந்தோறும் 10-ம் தேதிக்குள் ஊராட்சிக் கூட்டத்தை நடத்துதல் (பிரிவு 90)
2. இரு கூட்டங்களுக்கு இடையேயான இடைவெளி 60 நாட்களுக்கு மிகைப்படக்கூடாது
3. செயல் அலுவலர் என்ற முறையில் ஊராட்சி நிறைவேற்றும் தீர்மானங்களை செயல்படுத்துதல் (பிரிவு 84)
4. ஊராட்சி அலுவலகம் விடுமுறை நாட்கள்தவிர இதர நாட்களில் திறக்கப்பட்டு செயல்படுவதை கண்காணித்தல்
5. ஊராட்சி பணியாளர்களின் வருகை மற்றம் பணிகளை கண்காணித்தல்
6. ஊராட்சியின் 31 பதிவேடுகள், தளவாடச்சாமான்கள் ஊராட்சி அலுவலகத்தில் உள்ளதை உறுதி செய்தல்.
7. கைப்பம்புகள், விசைப்பம்புகள், தெரு விளக்குகள் 100 மூ செயல்படுகிறதா என்பதை கண்காணித்தல்
8. வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) நடத்தும் மாதாந்திர கூட்டங்களில் கலந்துகொண்டு கிராம ஊராட்சியின் செயல்பாட்டு அறிக்கையினை சமர்ப்பித்தல்
9. வீட்டு வரி, தொழில் வரி, உரிமக் கட்டணம், வீட்டுக்குழாய் இணைப்புக்கான குடிநீர் கட்டணம் ஆகியவற்றை வரி உரிய தேதியில் ஊராட்சிய எழுத்தர் வசூல் செய்வதை வசூலான தொகையை மறுநாளே வங்கியில் செலுத்தப்படுவதையும் கண்காணித்தல்
10. மனைப்பிரிவு கட்டிட வரைபடங்களுக்கு ஒப்புதல் அளித்தல் (அரசாணை எண்.255 ஊரக வளர்ச்சி துறை நாள் 18.8.1997)
11.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் செயல்படுத்தும் பொறுப்பு ஊராட்சித் தலைவருக்கு நிர்ணயம் செய்யப்படுகிறது (பிரிவு 16)
Instagram Link 🔗
https://www.instagram.com/reel/Da2sQfbB_gz/?igsh=NnQ1aGloaGtmc3I3
YouTube Channel 🔗
https://youtube.com/shorts/DfVNERWcjrg?si=I4ELgiZA_YUdJH0Y
Facebook Page 🔗
https://www.facebook.com/share/r/18w3rNy6rW/
Comments
Post a Comment